'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 15, 2020

குறித்தபடி தொடுத்த பாடல்கள் - 11


பாவகை: வெண்பா

1.       கவிஞர் பூங்கா சண்முகம்  

முந்தையோ  ரீந்த  பொலனணி  காப்பதோடு
எந்தமி  ழன்னையை  ஞாலத்தின்  - பந்தமாக்கும்
அம்பொன்  நவமணி  சூடுதலுமா   னந்தமெனச்
செம்மையாய்ச்   சேர்ப்போம்  செவி

2.       'பைந்தமிழ்ச் செம்மல்'
மன்னை வெங்கடேசன்

பிறமொழி மீதே பிரியாத பற்றோ
டுறைகின்ற மாந்தர் உளத்தில் - இறையெனும்
செம்மொழி நற்றமிழின் சீர்தனை யாங்கவர்கண்
செம்மையாய்ச் சேர்ப்போம் செவி

3.       கவிஞர் மதுரா

தம்மை யுணர்ந்தால் தலைநிமிர்ந்து வாழலாம்
இம்மையி லின்பமா மெப்பொழுதும் - அம்மையே
நம்முடன் நாடும் நலமா யிருக்கவிதைச்
செம்மையாய்ச் சேர்ப்போம் செவி

4.       கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன்

அன்றாடம் ஆற்றுகின்ற அன்புமிகு செய்கைகளே
என்றென்றும் வாய்க்கின்ற இன்பம(து) - இன்றுபோல்
நம்மைநாளும் நின்றுயர்த்தி நன்மைநல்கும் நட்பினைச்
செம்மையாய்ச் சேர்ப்போம் செவி

No comments:

Post a Comment