'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 14, 2020

நம்மைக் காப்போம்


பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்
  
ஒருபா ஒருபஃது - அறுசீர் விருத்தம்

இயற்கை மௌனம் காக்காமல்
    இயங்கிக் கொண்டே இருக்கிறது
தயக்கம் மனத்தில் எதுவுமின்றித்
    தாண்டிச் செல்லும் காலங்கள்
வியக்க வைக்கும் நிலைமைகளும்
    விடியல் நோக்கி எதிர்பார்க்கத்
துயரம் நீங்க ஊஞ்சல்கள்
    தூக்க மற்று விழித்திருக்கும்                      1

விழிகள் பார்க்கும் தகவல்கள்
    விரைவில் நீங்கி அகலுமன்றோ
தொழில்கள் இயக்கம் நின்றதென்று
    துயரம் வேண்டாம் மனத்தினிலே
சுழலும் உலகில் நவீனங்கள்
    தூய்மை கெடுத்துச் சென்றதினால்
தொழுவோம் இறைவன் திருவடிகள்
    துன்பம் நீங்கும் விரைவினிலே                   2

விரைவில் அடங்கும் கிருமியெல்லாம்
    வெறுமன் பேச்சு வேண்டாமே
திரையில் காணும் செய்திகளில்
    சிறிதும் உண்மை இல்லையன்றோ
துறையில் சிறந்த நிபுணர்கள்
    சுத்தம் காக்கச் சொல்கிறார்கள்
மறைந்து செல்லும் துன்பங்கள்
    மண்ணில் யாவும் அடங்கிடுமே                 3

அடங்கிச் செல்லும் எல்லாமே
    அகலும் அச்சம் மனத்தினிலே
இடர்கள் நிலைத்து நிற்பதில்லை
    எதுவும் கடந்து போகுமன்றோ
உடலில் எதிர்ப்புச் சக்தியினை
    உடனே சேர்க்கச் செயல்படுவோம்
தொடரும் நிலைகள் மாற்றமுறும்
    தொல்லை நீங்கும் உலகினிலே                 4            

உலகில் எல்லாம் நன்மைக்கே
    உழன்று மடியும் விரைவினிலே
கலங்கித் தவித்தே உள்ளத்தில்
    காயப் படுத்த வேண்டாமே
நிலவும் ஒருநாள் மறையுமன்றோ
    நெஞ்சில் கலக்கம் கொள்ளாதே
புலரும் பொழுதில் நன்மையெலாம்
    புதுமை காட்டி வருமன்றோ                                      5

வருமுன் காப்போம் நாமெல்லாம்
    வாடித் தளர்ந்து நிற்காமல்
அருகிப் போகும் தொற்றுநோய்கள்
    அச்சம் வேண்டாம் உள்ளத்தில்
மருகி மறைந்த நோயெல்லாம்
    மண்ணில் மடிந்து சென்றதல்லோ
திருப்பம் வாழ்வில் வருமன்றோ
    தீமை என்றும் நிலைப்பதில்லை                               6

நிலையாய்க் கிருமி நிற்பதில்லை
    நிறுத்த வைப்பர் மருத்துவர்கள்
கலையும் கலக்கம் விரைவினிலே
    கனலும் தணியும் ஒருநாளில்
அலைகள் கரையில் நிற்பதில்லை
    அனைத்தும் அடங்கிப் போகுமன்றோ
சிலையாய் நின்று கலங்காமல்
    தெய்வத் துணையை நம்புவோமே                           7

ஏக்கம் மனத்தில் வேண்டாமே
    எதிலும் தூய்மை காப்போமே
தாக்கும் கிருமி மாண்டுவிடும்
    தனித்து வாழப் பழகிவிடு
தூக்க மின்றிப் போராடும்
    தூணாய் நிற்கும் மருத்துவர்கள்
காக்கும் கரங்கள் அவர்களன்றோ
    கனிவு பொங்க வாழ்த்துவோமே                              8

ஏழை பசியில் வாடுகின்றார்
    எங்கும் அமைதி நிலவுகையில்
சாழை யின்றித் தெருவினிலே
    சாய்ந்து மடிந்து போகின்றார்
நாழி விரைந்து செல்கிறது
    நலிந்து மெலிந்து மாள்கின்றார்
கீழே விழாமல் காப்பாற்றிக்
    கிடைக்கும் உணவைப் பகிர்ந்திடுங்கள்                 9

பகிர்ந்தே உண்போம் என்றென்றும்
    படரும் நோய்கள் வீழ்த்தாது
நெகிழ்ந்து வணங்கி மகிழ்வார்கள்
    நெஞ்சம் அமைதி கொள்ளுமன்றோ
விகிர்த மின்றி உதவிசெய்தால்
    வினைகள் மறையும் அவனியிலே
இகழ்தல் இல்லா வாழ்வினிலே

No comments:

Post a Comment