'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 15, 2018

ஓட்டைப் படகு

ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன்

காவிாி நதியில் படகு சென்று கொண்டிருந்தது . படகோட்டிப் படகைச் செலுத்திக் கொண்டிருந்தான் . படகிலே நானும் தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்.

படகு நடுஆற்றில் சென்று கொண்டு இருந்தபோது , திடீரென்று ஆடத் தொடங்கியது . ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பாா்த்தபோது  ஒரு ஓட்டையின் வழியாக  நீா் உள்ளே வந்துகொண்டிருந்தது. உடனே ஓடக்காரன், அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான் . சிறிது நேரம் , படகு ஆடாமல் , அசையாமல் சென்றுகொண்டு இருந்தது . திடீரென்று  மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து , தண்ணீா் அதன் வழியாகப் பீறிட்டுக்கொண்டு வந்தது . முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக் கொண்டது . ஆக நான்கு ஓட்டைகள் வழியாகத் தண்ணீா் வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்தது . படகோட்டி என்ன செய்வது என்று தொியாமல் விழித்துக் கொண்டிருந்தான் .

இதைப் பாா்த்த தத்துவஞானி, "ஓட்டைப் படகிலே , மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன" என்றாா் .

" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீா்கள் ? "

"தம்பி! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே! அதைக் குறிப்பிட்டேன்"

"ஐயா! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல. படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் தப்பிக்க ஏதாவது வழியுண்டா? அதைச் சொல்லுங்கள் ".

" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது . இந்தக் கடலைக் கடக்க வேண்டுமென்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக்கூடாது . அதாவது  தாமதம் , மறதி , சோம்பல் , உறக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது . அவ்வாறு இருந்தால் , நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும் . இதை நான் சொல்லவில்லை வள்ளுவா் சொல்லுகிறாா் .

நெடுநீா் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீராா் காமக் கலன் . ( 606 )

"ஐயா! அவசரம் தொியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீா்கள். திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் மூவரும் சாகப் போகிறோம்; இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்; வெட்டிப்பேச்சு வேண்டாம். "

" தம்பி ! இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கவும், வள்ளுவா் ஒரு வழி சொல்லுகிறாா். "
" அது என்ன வழி ? "

அறிவற்றங் காக்கும் கருவி செறுவாா்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( 421 )

அதாவது அறிவு இருந்தால், அது நம்மை மரணத்திலிருந்துகூடக் காப்பாற்றிவிடும். மேலும் அந்த அறிவு, பகைவா்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும் ."

"ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம்? அதைச் சொல்லுங்கள் . "

உடனே தத்துவஞானி சுற்றுமுற்றும் பாா்த்தாா் .

படகின் ஒரு மூலையில் நான்கு தகர பீப்பாய்கள் இருப்பதைப் பாாத்தாா் . உடனே அவா், ஓடக்காரனைப் பாா்த்து, "ஓடக்காரா! அந்த நான்கு பீப்பாய்களும் காலியாகத்தானே உள்ளன ? " என்று கேட்டாா் .

"ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன . "

"அப்படியானால் அதன் வாயைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும், பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு "

ஓடக்காரனும் , நானும் விரைவாக அந்தப் பணியை முடித்தோம் .

"அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள்இறக்குங்கள்."

நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சாியாக இருந்தது . ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகு போல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத் தடுமாறிப் பீப்பாய்ப் படகின் மேலே ஏறி அமா்ந்தோம். பாதுகாப்பாக மறுகரையை அடைந்தோம் .

No comments:

Post a Comment