'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

பைந்தமிழ்ச் சோலை இலக்கியப் பேரவை திருவண்ணாமலை கிளையின் ஆறாம் கூடல்!


பைந்தமிழ்ச்சோலை இலக்கியப்பேரவை திருவண்ணாமலை கிளையின் ஆறாம் கூடல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிளை நூலகத்தில் தமிழ்த்திரு. அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்களின் தலைமையில் 21/04/2019 அன்று மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.

தமிழ்த்திரு. .அமலா வரவேற்றார். மூத்த தமிழறிஞர் புலவர் அந்தணர்கோ, தமிழ்த்திரு. சொல்லினியன் ஆகியோர் முன்னிலை வகிக்க, தமிழ்த்திரு. .உமாராணி அவர்கள் நோக்க வுரையாற்றிப் பேரவையின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார். ஆரணி கிளை நூலகர் தமிழ்த்திரு. முகுந்த் அவர்கள் வாழ்த்துரை கூறினார்.

கவிஞர் சி.ஆறுமுகம் அவர்கள்குறளமுதம்எனும் தலைப்பில் குறளமுதமூட்டிச் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் முனைவர் .உமாராணி அவர்கள் இலக்கியச் சாரலில் அனைவரையும் நனையவைத்தார். அர.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் யாப்பிலக்கண வகுப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் மழலை அனுஜா திருக்குறள் மழைபொழியக்,  கலந்து கொண்ட அனைவருக்கும் அர.விவேகானந்தன் அவர்களின் எழுதிய 'விரல்நுனி விளக்குகள்' எனும் நூலை நெறியாளர் அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் நினைவுப் பரிசாக வழங்கினார்.

நிறைவாகத் தமிழ்த்திரு.சுதா அவர்கள் நன்றி நவில நிகழ்வு  இனிமையாக நடந்தேறியது. நிகழ்வு முழுவதையும் ஆவணப்படுத்தும் நோக்கில் தமிழ்த்திரு. ருக்கேஷ்குமார் அவர்கள் ஒளிப்படம் எடுத்துச்சிறப்பித்தார். இந்நிகழ்விற்குப் பாவலர் .மோகன், பாவலர் வித்யா, பாவலர் பாரதி, பாவலர் செல்வக்குமாரி உள்ளிட்ட பாவலர்களும், பல்வேறு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்சான்றோர் பெருமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக, அடுத்த நிகழ்விற்கான இனிய பொழுதை மனத்திலேற்றுப் பிரிய மனமில்லாது அனைவரும் இல்லம் அடைந்தனர்.

No comments:

Post a Comment