'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

காத்திருத்தல்

பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்

நெஞ்சத்தில் வந்தவளே என்னைநீ நித்தமும்
கெஞ்சிட வைப்பதே னோ

காதலின் தீபத்தை ஏற்றிய பெண்ணே
நோதலில் மாய்ப்பதே னோ

நானுன்னைச் சந்திக்க ஆர்வத்தால் வந்ததும்
நாணத்தால் கண்களை மூடிவிட் டாய்

நடமாடிடும் அழகேதினம் வருவாயென மனமேகிட
நல்வாக்குச் சொல்லாமல் ஓடிவிட் டாய்

கன்னியுன் எண்ணமே என்றனின் நெஞ்சத்தில்
காற்றாய்த் தீண்டவே மாள்கின்றே னே

கனியேதினம் மனவாசலில் ஒளிவீசிட வருவாயென
கற்பனை வாழ்வினில் வாழ்கின்றே னே

என்றனின் காதலை ஏற்றதும் உன்றனின்
எண்ணத்தில் என்றென்றும் நானிருப்பேன்

இனியாவது மகிழ்வாயெனை நலமேதினம் தருவாயென
இன்பத்தில் நானென்றும் காத்திருப்பேன்

No comments:

Post a Comment