'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2021

வண்ணப்பாடல்

அரசி.பழனியப்பன்

தனதன தத்தத் தத்தன தத்தத்
தனதன தத்தத் தத்தன தத்தத்
தனதன தத்தத் தத்தன தத்தத் தனதான

தலையெழு துற்றுப் பற்றொடு கொட்டத்
தரசிய லெட்டித் தப்பித முற்றத்
தனநிறை யுற்றுச் சத்தொடு சுற்றித் திரிவாராம்

தறிகெடு மெத்தர்க் குற்றிடு நட்புக்
களமதி லுற்றுப் பத்திமை முற்றித்
தமதுறு கட்சித் தற்குறி வெற்றிக் கலைவாராம்

கலைபல கற்றுச் சொற்றிற முற்றுத்
தலைமையை எட்டச் சத்தியு மற்றுக்
கவலையை உற்றுச் சித்தமொ டுக்கித் திகழ்மேலோர்

களிமன முற்றுக் கற்றது வைத்துத்
தொகுநிதி முற்றத் தெற்றென விட்டுக்
கனிவொடு மக்கட் பொற்பணி மெச்சப் புரிவாராம்

தலையுயர் வுற்றுப் பொற்றர மெட்டக்
களைகளு முற்றத் தட்டிய ழித்துத்
தகுதியில் மிக்கத் தக்கவ ருய்த்துத் துணையாகத்

தலமுறை நிற்றுச் சக்திகொ ழிக்கத்
தருமிறை மொத்தச் சக்திபெ ருக்கித்
தழையருள் கொட்டப் பொற்பினை யுற்றுச் சமுதாயம்

குலமுறை யற்றுப் பொற்றமிழ் வைத்துத்
தலைமுறை தொட்டுத் தக்கன வுற்றுக்
குடிமுறை மொத்தத் தொற்றுமை யுற்றுப் புகழ்சேரக்

கொடியுய ருச்சிக் குற்றிட வெற்பிற்
படைமற முற்றக் கொற்றவர் பற்றக்
கொழிதமி ழெச்சத் துத்திற லுற்றுத் திகழ்வோமே!


வண்ணப்பாடல் 2

தானா தானா தானா தானா
தானா தானத் தனதான

வீழா நாடாய் வாழ்வோர் பீடாய்
வீறாய் வாழத் தகுமாறு
மேலாய் ஆள்வோர் தானாள் வாரேல்
மேனாள் போலத் திகழாதோ?

நாளோ கோளோ வேறே தேதோ
நாடா தோடித் தொலையாதோ?
நாவார் தேனாய் மூவா தேவாழ்
தாய்நேர் வேதத் தமிழாலே

வாழ்வோ ரூடே மேல்கீழ் சாதீ
பாரா தோடித் தொலையாதோ?
மாதே ஆனார் தீதே வாழ்நாள்
வாரா தேமப் படுவாரோ?

மேலோய் !பாலா! சீலா! நூலோர்
மேலா யோதத் தகுகோவே!
வேலா! பாராய்! வேலால் தீராய்!
வேளே! தேவப் பெருமாளே!

No comments:

Post a Comment