'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

ஆசிரியர் பக்கம்

பெருங்கொடுமைக் காலத்தில் நாம்வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமே இப்பெருந்தொற்றை ஒழிக்கும் வழியறியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

ஒருபக்கம் இது உண்மைதானா?என்ற ஐயமும், இன்னொருபக்கம் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து வீழ்வதுமாய் ஒரு குழப்பமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

பன்னாட்டரசுகள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்விற்கான தேவைகளையறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. சிலநாடுகளில் தொற்றைக் கண்டறியும் கருவிகளையும், நோய் வந்துவிட்டால் அதன் சிகிச்சை செலவுகளையும் அரசே பார்த்துக் கொள்கிறது.

நம்நாட்டிலோ… சோதனை தொடங்கி நோய் குணமாகி வீட்டிற்கு வருவதற்குள் சில இலட்ச உரூபா செலவழிகின்றன. வசதிபடைத்தவன் செலவழிக்கிறான். இல்லாதவனுடைய நிலை…?

சில கயவர்கள் மருத்துவமனை என்ற பெயரில் கொள்ளையடிப்பதும், பொய்யான சோதனை முடிவுகளைக் காட்டுவதுமாக இப்பெருங்கொடுமையிலும் கொள்ளையடிக்கும் ஈனத்தைச் செய்கின்றனர்.

நம் அரசோ மருந்துக்கும் வரிபோடுகிறது.

நாம் வைக்கும் வேண்டுகோள் இதுதான்….

மக்களை வாழ விடுங்கள்

அன்புடன்
பாவலர் மா.வரதராசன்.

No comments:

Post a Comment