'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

எங்கே சென்றாய் பேரழகே!

நா.பாண்டியராசா

அன்பே உன்னை மறவேனோ
   அமுத மொழிமை மறப்பேனோ
இன்பச் சுவையை இழப்பேனோ
   இனியப் பொழுதை துறப்பனோ
மென்றுத் தின்ற இதழ்களைதான்
   மெல்ல நழுவ விடுவேனோ
உன்னால் இங்கே சாகிறேனே
   உயிரே நேரில் வருவாயா?

பூவைப் போன்ற உடலழகை
   பூட்டி வைத்தால் பயனுண்டோ?
பூவை நானும் தொட்டிடவே
   பார்வை மட்டும் போதிடுமோ?
தேவைத் தீர வழிச்சொன்னால்
   தேளைப் போல் கொட்டுவதேன்?
பாவை உன்னைக் காணத்தானே
   புவியில் ஆனாய் நான்பிறந்தேன்!

கன்னே உன்னால் உருகுகிறேன்
   கண்மணி பூவே வாயேன்டி
உன்றன் நினைவில் வாடுகிறேன்
   உயிலே சேதி சொல்லேன்டி!
என்றும் என்னை ஆள்பவளே
   எங்கே சென்றாய் பேரழகே!
என்று வருவாய் என்னருகில்
   என்றே நானும் ஏங்குகிறேன் !.

No comments:

Post a Comment