'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

முடிவு - சிறுகதை

பைந்தமிழ்ச் செம்மல் 
நிர்மலா சிவராசசிங்கம்

அலுவலகத்தில் வேலையில் மூழ்கி இருந்த நந்தினி நேரத்தைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்

ஓ மாலை ஐந்து மணியாகி விட்டதே என்று தனக்குள் முணுத்து முணுத்தாள் வழமையாக நான்கு மணிக்கே வேலை முடித்து வீட்டுக்குச் சென்று விடுவாள் .இன்று முக்கிய வேலை என்றதால் நேரத்தைக் கவனிக்கத் தவறி விட்டாள் .

ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டாள் .இருபது நிமிட நடை தூரத்தில் தான் அவளது வீடு இருந்தது .ஆனாலும் பிந்திச் சென்று விட்டால் கணவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் என்று பயத்தில் விரைவாக நடந்து கொண் டு இருந்தாள் .

அவளது எண்ண ஓட்டத்தில் கணவர் சந்துருவின் முகம் தான் நிழலாடிக் கொண்டு இருந்தது .எதற்கு எடுத்தாலும் சந்தேகப் பட்டுக் கொண்டு இருப்பார் .நந்தினி நேர்மையான பெண் .தானுண்டு தன் வேலை என்று இருப்பவள்.அவள் மீது சந்தேகம் கொள்வது சந்துருவின் வழமையான போக்கு . சொற்களால் அவளைக் காயப்படுத்துவதில் சந்துருவுக்கு இன்பம்

விரைவாக நடந்து வந்த நந்தினிக்கு மேல்மூச்சு கீழ் வாங்கியது .வீட்டுக் கதவைத் திறக்கும் போது

.”என்ன தாமதம் யாருடன் கதைத்துக் கொண்டு இருந்தாய”; என்று கேள்வி கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தான் சந்துரு.அவள் மௌனமாக உள்ளுக்குச் சென்றாள் .

கோபத்துடன் சந்துரு அவள் தலையைப் பிடித்து கீழே தள்ளி விட்டான் .தலையில் பலமான அடி பட்டு விட்டது

அவள் கீழே விழுந்தாள் .சந்துரு கோபம் அடங்காதவனாய் கேவலமாக பேசி விட்டு வெளியே சென்றான் .சில நிமிடங்களில் நந்தினி மெல்ல எழும்பி நீராடி நெற்றியில் ஒத்தடம் மெல்லக் கொடுத்தாள் .

திருமணம் முடித்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது .ஆனால் சந்துரு நந்தினி மீது அன்பு காட்டுவதில்லை .மாறாக இப்படி மிருகத்தனமாகவே நடந்து கொண்டு வருகிறான் .நந்தினி தன்னை விட உயர்ந்த பதவியில் நல்ல சம்பளம் பெறுகிறாள் என்ற காரணமோ தெரியவில்லை .நந்தினி சந்துருவிடம் அன்பாகப் பேசினாலும் அவன் எடுத்து எரிந்து தான் பேசுவான் .குடும்ப உறவிலும் அவனுக்கு ஈடுபாடு இல்லை

நந்தினிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை .. ஆத்திரம் அடங்கியதும் சந்துரு வீட்டுக்குத் திரும்பியதும் நந்தினி மெல்ல உணவைப் பரிமாறிய படியே “நான் நாளை என் பெற்றோர் வீட்டுக்குப் போகிறேன் .அங்கிருந்து வேலைக்குச் செல்கிறேன் .நீங்கள் உங்களுக்கு விரும்பியவாறு வேறு ஒரு பெண்ணைத்திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழுங்கள”; என்று கூறி விட்டு தன் அறைக்குள் சென்றாள் உள்ளே சென்று பெட்டிக்குள் தன் உடுப்புகளையும் முக்கியமான சில பத்திரங்களையும் எடுத்து வைத்து விட்டு அமைதியாக உறங்கினாள் .இப்போது தான் அவள் மனம் ஆறுதல் அடைந்தது .

மறுநாள் விடிந்ததும் அவள் பெற்றோர் வீட்டுக்குச் சென்றாள் .அங்கு அம்மாவுக்கு இரண்டு வருடங்களாக பட்ட கஷ்டங்களை கூறினாள் . நான் இங்கு தான் இனி இருக்கப் போகிறேன் என்று கூறினாள் .அவளின் அம்மா அதிர்ந்து போனாள்

“.ஏன் அம்மா இதை முதலில் சொல்லவில்லை” என்று கூறி வருத்தம் அடைந்தாள் .

“இப்போது இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பல நிலையங்கள் இருக்கின்றன .சொல்லி இருந்தால் அங்கு செல்வதற்கு வழிகள் சொல்லி இருப்பேன் .மற்றவர்கள் எம்மைப் பற்றி என்ன சொல்லுவார்கள் என்று நினைத்தால் வாழ முடியாது .பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கப் பழக்க வேண்டும் என்று ஆறுதல் கூறினாள் .இப்போது அமைதியாக இரு முடிவு எடுக்கலாம்” என்றாள்

சந்துருவுக்கு நந்தினி சென்றவுடன் வீடு வெறுமையாக இருப்பதை உணர்ந்தான். தன் தவறுகளை உணர்ந்தான் .ஏன் நான் மிருகத்தனமாக இவ்வளவு காலமும் நடந்தேன் என்று நினைத்தவாறு நந்தினியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினான்

No comments:

Post a Comment