'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

தமிழர்களே... தமிழர்களே!

ஆரியத்தை வெல்வதற்கு ஆங்கிலர்க்குத் தாழ்திறந்தாய்
பூரிய இந்தியைப் பூட்டிவிட்டாய்-சீரிய
சிந்தையின்றிச் சீழாந் திராவிடத்தை ஏன்கொண்டாய்
தந்தைதாய் இல்லாச் சருகாநீ-கந்தகமே
ஆயிரம் ஆண்டுகளாய் ஆரியத்தை வாளெடுத்துப்
பாயிரத்தெ றிந்ததெலாம் பைந்தமிழே-வாயிருந்தும்
கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தில் சேர்ந்தாயே
தாலிக் குகந்ததுவோ தாய்தமிழா-வேலியென
நின்றாரே மேய்ந்தகதை நீயறிந்தும் வெட்கமின்றிச்
சென்றவர்பால் சேருகின்றாய் தீதிலையோ-கொன்றழிக்கும்
தீப்பகைதாள் தாங்கத் திராவிடத்தார் போனதன்றிக்
காப்பில்லை என்பதனைக் காண்கிலையோ-மூப்பிலா
செந்தமிழச் சொந்தங்களே சேர்வீர் தமிழர்களாய்
எந்நோய்க்கும் இஃதே எதிர்ப்பு
                                                        -ஆதிகவி

No comments:

Post a Comment