'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

வெற்றி - சிறுகதை

மதுரா

வாழ்த்துகள் ...என்ற ஒலி காதையும் மனசையும் நிறைத்துக் கொண்டிருக்க...

பூங்கொத்துகளையும் மாலைகளையும் சுமக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் விஜயன்.

இந்த ஆண்டு டர்ன்ஓவர் மட்டும் ஐந்து கோடி... லாபம் ஒரு கோடி..

கம்பெனி தொழிலாளர்கள் குதூகலமாக கொண்டாடிக் கொண்டிருக்க,

என்னோட எல்லா மூவ்மன்ட்டும் வெற்றிதான்.. என் வெற்றிய யாரும் தடைபோட முடியாது"என்று பெருமையாக,

ஆனந்தம் பொங்க தன் மனைவி ஜெயந்தியிடம் சொல்லிகொண்டிருந்தவன்

ஒர் ஓரமாக சோகமாக அமர்ந்திருந்த தன் செல்ல மகள் 'சைந்தவி' யை பார்த்துவிட்டான். பதறிப்போனவனாய் "என்னாச்சு ஜெயந்தி? ஏன் என் பொண்ணு இப்படி இருக்கா? தவித்தான்.

பார்த்துப் பார்த்து வளர்த்த மகள் பல லட்சம் செலவு செய்து திருமணம் செய்து கொடுத்தான். இப்படி வருத்தமா உட்கார்ந்திருக்காளே..

ஜெயந்தி!! என்ன ஆச்சு?

"உங்க பொண்ணாச்சே எல்லாத்திலையும் ஜெயிக்கணும்னு நினைச்சா....மாப்பிளையோட சின்ன வாய்த்தகராறு இப்ப கோவிச்சுக்கிட்டுஇங்க வந்து உட்கார்ந்திருக்கா....சாதாரண விஷயத்தை ஜெயிக்க நினைச்சு வாழ்க்கையை தோத்துடுவாளோனு எனக்கு பயமாயிருக்கு"

ஜெயந்தி ஒரு தாயாய்க் கலங்கி நின்றாள். ஒரு கணம் திகைத்தவன் சட்டென சுதாரித்து

"வாம்மா சைந்தவி உங்க வீட்டுக்கு போகலாம் மாப்பிளைகிட்ட நான் பேசுறேன் என்ன பிரச்சினை என்றாலும் பேசி சரி செய்திடலாம் "என்றான்.

அப்பா சண்டையே உங்க வெற்றியின் பின்னணி பற்றி தான்..நியாயமான வழியில் எப்போதும் ஜெயிக்க முடியாது.உங்கப்பா குறுக்குவழியில ஜெயிக்கிறார் னு சொல்றார் உங்க மாப்பிள்ளை.

ஆமாம் னு சொல்லிடு மா.

அப்ப நான் தோற்று போயிட்டேனா?

"இங்க பாரும்மா வாழ்க்கை வேறு பிசினஸ் வேறு. வாழ்க்கையை வாழ்ந்து ரசிக்கணுமே தவிர போர்க்களமா மாத்திடக்கூடாது.சில நேரங்களில் ஜெயிக்கறதுக்காகவே தோற்கணும்....வாழ்க்கையில வெற்றி பெறுவதற்கு விட்டுக்கொடுத்தல் பொறுமை ங்ற குறுக்குவழியில தான் போகணும். "ஸ்டூப்ஸ் டு கான்கேர் னு சொல்வாங்க புரிஞ்சிப்பேனு நினைக்கிறேன்"

"அப்பா இதுவும் குறுக்குவழி தான்.ஆனா நியாயமான குறுக்குவழி.எங்க வீட்டுக்கு போகலாம் வாங்க" என்று கிளம்பிய மகளை பார்த்ததும் ஜெயந்தி கணவனின் வெற்றி மூவ்மெண்டை புரிந்துகொண்டு பெருமிதத்தோடு சிரித்தாள்




No comments:

Post a Comment