'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

வண்ணப்பாடல்

 வண்ணப்பாடல்


கவிதை

**********

தனத்தன தனத்தந் தனத்தன தனத்தந்

தனத்தன தனத்தந் தனதானா



கருத்துட னுருக்குங் கவித்துவ மிருக்குங்

களிப்பது மிகுக்குங் கனவாமே

கழித்தவ ரொதுக்குங் கருப்பொரு ளெடுக்குங்

களத்தினி லொலிக்குங் கனலாமே


குருத்துவ மளிக்குங் குறிப்பொடு சிறக்குங்

குணத்தினை நிறைக்குங் குரலாமே

குழப்படி யொழிக்குங் குலப்பகை யழிக்குங்

கொதிப்பதை நிறுத்துங் கனிவாமே


திருக்குறள் முழக்குந் திருட்டினை விரட்டுந்

திரட்டுவ தனைத்துந் திருவாமே

தெருக்களை யசைக்குந் தருக்களி லிசைக்குந்

திருப்புக ழினிக்குங் கடலாமே


சுருக்கமும் அருத்தந் திகைப்புற விரிக்குஞ்

சுருக்கென வுறைக்குஞ் சுடராமே

துலக்கமு மொளிர்க்குங் கலக்கமு மடக்குஞ்

சுரத்தொடை யணைக்குங் கவியாமே!


செல்லையா வாமதேவன்

No comments:

Post a Comment