'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2019

மழலையே சொர்க்கம்


கவிஞர் சரசுவதி ராசேந்திரன்

எழுசீர் விருத்தம்
எத்தனை செல்வம் தேடிய போதும்
    என்னுயிர் பிள்ளையே உயர்வு
சொத்துகள் என்றும் பெரிதென ஆகா
    சொந்தமுன் வாரிசே விடியல்
இத்தரை மீதில் இல்லற இணைப்பாய்
    இனித்திடும் மழலையே சொர்க்கம்
முத்தென வந்தாய் முழுமதி நிலவே
    முகிழ்த்திடும் சிரிப்பதன் அழகே!

No comments:

Post a Comment