மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்
(தெம்மாங்குக் கண்ணிகள்)
கொத்தித் திரியும் கோழிக
ளுக்குக்
    குறிக்கோள்
எதுவு மிருக்காது - தமிழ்
நத்திப் பிழைக்கும் நாய்களுக்
கிங்கே
    நன்மனம்
துளியு மிருக்காது!                                   1
தன்மொழிப் பற்றைத் தவறியும்
மறவான்
    தமிழில்
பற்றே பிறக்காது - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி
ஆய்ந்தால்
    தாய்மொழி
தமிழாய் இருக்காது!                           2
வள்ளுவம் எங்கள் வாழ்வியல்
என்றால்
    மறுப்பான்
துடிப்பான் பரிதவிப்பான் - பின்
வள்ளுவன் எங்கள் சாதியே
என்பான்
    வண்ணம்
பூசி மகிழ்ந்திடுவான்                             3
தமிழில் பிறமொழிச் சொற்களை
எந்தத்
    தயக்கமும்
இன்றிக் கலந்திடுவான் - அது
தமிழை வளர்க்கும்
வழியே என்பான்
    சரம்சர
மாய்ப்பொய் அளந்திடுவான்!                  4
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி
ஆய்ந்தால்
    தாய்மொழி
தமிழாய் இருக்காது!)
மரபைப் போற்றும்
செயல்கள் எவையும்
    மதிக்கவும்
மாட்டான் சிதைத்தொழிப்பான் - தமிழ்
மரபு கவியிலும்
பிழையைச் செய்வான்
    மரபைக்
கொன்று புதைத்தொழிப்பான்!              5
வலிமிகும் என்றால் மிகாமல்
எழுதி
    வழக்கப்
படுத்துவோம் எனச்சொல்வான் - அவன்
    வலிமிகா
தென்றால் "நல்லா யிருக்கே"
மிகுந்தால் என்ன கேடென்பான்!                               6
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி
ஆய்ந்தால்
    தாய்மொழி
தமிழாய் இருக்காது!)
யாப்பில் பலவிதப் பிழைகளைச்
செய்வான்
    அதனால்
என்ன இழப்பென்பான் - நீள
ஆப்பை வைப்பான்
ஆலாம் தமிழை
    அசைத்துத்
தள்ள முயற்சிப்பான்!                            7
அரைகுறை யாகக் கற்றுக்
கொள்வான்
    அதற்குள்
ஆசான் ஆகிடுவான் - புகழ்
விரைவாய்ப் பெறுவான் சான்றிதழ்
விருதை
    விலைகொடுத்
தேதான் வாங்கிடுவான்!                 8
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி
ஆய்ந்தால்
    தாய்மொழி
தமிழாய் இருக்காது!)
இலக்கிய வட்டம் பேரவை
என்பான்
    இலக்கோ
எதுவும் இருக்காது - பணம்
பலப்பல வாகச்
சுருட்டிக் கொழுப்பான்
    பைந்தமிழ்த்
தொண்டே நடக்காது!                         9
தமிழ்தமிழ் தமிழ்தமிழ் தமிழ்தமிழ்
என்பான்
    தன்பிள்
ளைக்குத் தரமாட்டான் - அவன்
தமிழை விடுத்துத்
தன்வீட் டிற்குள்
    தாய்மொழிப்
பற்றை விடமாட்டான்!                    10
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி
ஆய்ந்தால்
    தாய்மொழி
தமிழாய் இருக்காது!)
தையே எங்கள்
புத்தாண் டென்றால்
    தைதை
தைதை எனக்குதிப்பான்! - மிகு
பொய்யைப் புரட்டைச் சேர்த்துச்
சித்திரை
    புத்தாண்
டென்று கதையளப்பான்!                       11
வாழ்க்கை நடத்தத் தமிழைப்
பேசி
    மானங்கெட்டு
வாழ்ந்திடுவான் - இழி
சீழ்க்கை யாகப் புழுத்து
நெளிந்து
    சீரழி
வாக வீழ்ந்திடுவான்!                                      12
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி
ஆய்ந்தால்
    தாய்மொழி
தமிழாய் இருக்காது!)
தம்பீ தம்பீ
விழித்துக் கொள்வாய்
    தமிழின்
புண்ணை ஆற்றிடுவாய் - உன்னை
நம்பி இந்தத்
தமிழினம் இருக்கு
    நாட்டை
உலகில் ஏற்றிடுவாய்! - தமிழ்
    நாட்டை
உலகில் ஏற்றிடுவாய்!                              13
No comments:
Post a Comment