'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 14, 2019

ஆசிரியர் பக்கம்


ஆசிரியர் பக்கம்


அன்பானவர்களே! வணக்கம். 

உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவருவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்;வாழ்த்துகள்.

   ஏன். . .அப்படியானால் சித்திரை . . .?இதற்குப் பெரியதொரு விளக்கமாக நம் தமிழறிஞர் பலரும் தங்கள் ஆய்வு முடிவுகளை நிறுவியிருக்கின்றனர். அதற்கு மறுப்பாகப் பல கூற்றுகள் இருப்பினும்…

   யாம் அதன் ஆழத்திற்குள் செல்லாமல் பண்டைய தமிழ் மாந்தர்தம் வாழ்வியலில் மிகமுதன்மையான இடம்பிடித்;த தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் திருநாளை மட்டுமே பொருண்மையடிப்படையிலான நேர்வாகவும், தீர்வாகவும் கொண்டு தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கிறோம்.

   விரைவில் தைத்திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழர் ஏற்கும் நாள்வரும் என்ற நம்பிக்கையுடன்… 

தைத்திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத் தாண்டு
   தமிழர்திரு நாளொன்றே சான்றாய்க் காணீர்
வைத்திங்கே இழப்பதற்கும் ஏது மின்றி
   மறத்தோடும் அறத்தோடும் மானங் கெட்டோம்
iநாய்த்திண்ண வந்திணைந்த நுளம்பு கூட்டம்
   நோயாகித் தமிழ்நாட்டைபி பிடித்து வாட்டி
பொய்த்தேராய் பண்பாட்டைப் புதைத்து விட்டார்
   பொய்யாக்கித் தமிழாண்டைப் புதுக்கு வோமே!  

                தழிழன்புடன்
பைந்தழிழரசு பாவலர் மா.வரதராசன்                      
ஆசிரியர்

No comments:

Post a Comment