சேலம்
பெற்றெடுத்த எண்ணற்ற இலக்கியவாதிகளின் பட்டியலில் கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டு
தனித்தன்மையில் மிளிர்பவர் ஐயா கவிமாமணி சேலம்பாலன்
அவர்கள். அவரே இம்மாத நடுப்பக்கத்தை
அலங்கரிக்கும் நாயகராவார். 
விடுதலைப்
போராட்ட வீரர் க.பழனியப்பன்–வீ.மாரியம்மாள் தம்பதியருக்கு 15.09.1951 அன்று சேலம் அம்மாப்பேட்டையில் பிறந்தவர். 
பத்தாம்
வகுப்புவரை மட்டுமே படித்தாலும் தன்ஆற்றலால்  அறிவால்
இளம் தலைமுறைக்குத் தானொரு பல்கலைக் கழகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 
கைத்தறி,
விசைத்தறி ,தையல் தொழில், கூரியர் எனப்பல்வேறு தொழில் செய்தாலும் தமிழன்னை மீதுகொண்ட அளவில்லாக் காதலால் கவிதைகளின் பக்கம் காலடி வைத்தவர். பின்னாளில் 
ஈரோடு
தமிழ்ச்சங்கத்தின் தலைவராகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு தமிழறிஞர்களைத் தேடித்தேடிக் கௌரவித்ததோடு மட்டுமல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தியவர். 
இதழ்ப்பணி
: 
·       
தமிழ்மலர்
,இதய தாகம் 1982 83 . 
·       
துணையாசிரியர் 
·       
துளி
ஆசிரியர் 1986 முதல் 30 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியவர் 
·       
குந்தர்
குரல் ஆசிரியர். 
·       
பொறுப்பாசிரியர்
:தமிழ் மலர் , 
·       
மடிகாரர்முரசு
.செங்குந்தர் முரசு ஆசிரியர் 
      எனப்பல்வேறு இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர் 
பெற்ற
விருதுகள் : 
தமிழக
அரசின் 
·       
அகவை
முதிர்ந்த தமிழறிஞர். 
·       
கவிமாமணி 
·       
செந்தமிழ்ச்செயல்மணி 
·       
இலக்கியக்
காவலர் 
·       
கவியரசர் 
·       
விழா
வேந்தர் 
·       
பைந்தமிழ்க்குவை
மற்றும் முப்பதுக்கு மேற்பட்ட விருதுகளைப்பெற்றவர் 
படைப்புகள்
: 
·       
காமராசர்
பிள்ளைத் தமிழ் 1982; 
·       
குமரகிரி
குமரன் அந்தாதி 1983 
·       
மாண்புமிகு
மனைவி தியாகி 2001 
·       
திருப்பூர்
குமரன் தேன் கவிமாலை 2004 
·       
வியன்
திருக்குறளும் விருத்தப்பா உரையும் 2009 
·       
ஏறத்தாழ
1000 க்கும் மேல் கவியரங்கம் கண்டு
தமிழ்ப்பணி செய்தவர். 
·  300க்கும்
மேற்பட்ட பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர். 
ஓய்வென்பது
இல்லாமல் தமிழ் தமிழென்று ஓடியோடி உழைத்துக் கொண்டிருக்கும் அறுபத்தேழு வயது இளைஞர் அவர் அவர்வாழும் காலத்திலே
அவரோடு பயணிக்கின்றோம் என்பதிலே நாம் பெருமை கொள்ளலாம். 
பழக
எளிமையும், பண்பும், ஓயாத சமூகசேவையும், தமிழ்ப்பற்றும்
கொண்டிலங்கும் சேலம்பாலன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து தமிழ்த்தாய்க்கு மென்மேலும் சிறப்புகள் செய்ய வேண்டுமென வாழ்த்துவதில் தமிழ்க்குதிர் பெருமை கொள்கின்றது. 
சேலம் பெற்றெடுத்த எண்ணற்ற இலக்கியவாதிகளின் பட்டியலில் கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டு தனித்தன்மையில் மிளிர்பவர் ஐயா கவிமாமணி சேலம்பாலன் அவர்கள். அவரே இம்மாத நடுப்பக்கத்தை அலங்கரிக்கும் நாயகராவார்.

No comments:
Post a Comment