பாவை
முப்பது 
மன்னை வெங்கடேசன் 
சென்ற இதழ்
தொடர்ச்சி ...
நாயகனாய்
நின்றவொரு நந்தகோ பன்தன்இல் 
வாயிற்கண்
சென்றங்கு வாய்மொழிந்த – ஆயர்குலச் 
சிட்டுரைப்
பாவதுவும் செந்தமி ழன்னைக்குப் 
பட்டியைந்த
நல்லம் பரம்.                       16. 
(ஆயர்குலச்
சிட்டு = ஆய்ச்சிப் பெண் ; 
அம்பரம் = துணி) 
அம்பரம் தண்ணீர்
அனைத்தும் தருவாயே 
எம்பெருமான்
நந்தனே என்றேத்தி – உம்பர்கோன் 
தன்னையும்
போற்றியவன் தாளணையும் கோதையுரை 
உன்னியே வாழ்வினை
உந்து                   17. 
உந்து மதகளிற்றன்
உண்ணினையும் நப்பின்னாய் 
வந்து திற;கதவை வாவென்று – நந்த 
மகனுடைய வாயிலில்
மன்னியே நின்று 
புகன்றதனை
நெஞ்சிற் புகுத்து.                  18. 
குத்து
விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலுறை
மத்தக வேழமொத்த
மாயவனை – வித்தகமாய் 
வாழ்த்து
முரைநெஞ்சில் வைத்தவரை எஞ்ஞான்றும் 
வாழ்த்துவர்முப்
பத்துமூ வர்.                   19. 
முப்பத்து
மூவர்க்கும் முன்னிற்கும் தேவனை 
நப்பின்னை
தன்னொடு நன்கழைத்துச் – செப்பிடு 
வாரதைக்
கோதையெனும் வார்குழலாள் தந்திட்டாள் 
ஏருற ஓர்கவி யே!                              20. 
ஏற்ற கலங்கள்
எதிர்பொங்கப் பால்சுரக்கும் 
ஆற்றலுடை
யாவினங்கொள் ஆயவனைப் –
போற்றி 
விளித்துரைத்த
பாவியந்தேன் வேண்டினேன் கண்டு 
களித்திருக்க
வாயிரங் கண்.                    21. 
அங்கண்மா ஞாலத்
தரசின்கீழ் சிற்றரசர் 
சங்க
மிருப்பார்போல் தாமங்குச் – செங்கண்மால் 
பொன்னடிக்கீழ்
ஆய்ச்சியர் போந்ததனைக் கோதையுன்சொல் 
மன்னுமனம்
தாருமம் மா!                      22. 
மாரி
மலைமுழைஞ்சில் மன்னிய சிங்கம்போல் 
மூரி நிமிர்ந்து
முழங்கிடெனச் – சீரிய 
சிங்கமாய் ஏகும்
திருமாலைக் கோதையும் 
அங்ஙனே
வேண்டினாள் அன்று.                        23.
அன்றிவ் வுலக
மளந்த பெருமானைச் 
சென்றங்குப்
பாடித் திருமாலே – குன்றெடுத்தாய் 
இன்றுன்னைப் பாட
இரங்கென்றாய் கோதையே
உன்றனுக்(கு)
என்னே ஒருத்து.                  24. 
(ஒருத்து – மன ஒருமைப்பாடு) 
ஒருத்தி மகனாகி
ஓரிரவில் மற்றை 
யொருத்தி
குடிலில் வளர்ந்த – திருமறு 
மார்பனைப்
போற்றிய மாதவள் தாள்பணி 
வார்தமை
யொன்றுவான் மால்.                         25.
மாலே மணிவண்ணா
வாராய் அருள்தாராய் 
பாலன்ன சங்கொடு
மற்றெல்லாம் – ஆலின் 
இலையாய் அருளென்
றியம்பிய கோதை 
குலமகளின்
பாதமதைக் கூடு.                  26. 
கூடாரை
வெல்லும்சீர் கோவிந்தன் தன்னையே
வாடாத சொற்கொண்டு
பாடியே – மாடா 
மனைத்தும்
தரவேண்டி மன்னியகோ தைப்பா 
மனத்துச்
செருக்கற வை.                       27. 
. 
கறவைகள்
பின்சென்று கானேகும் ஆயர் 
குறைவிலாக்
கண்ணனைக் கூவிச் – சிறுபேர் 
அழைப்பதனைப்
பாடும் ஆண்டாள் அடிசேர்ந்(து) 
இழைபவர் ஆவர்மா
சிற்று                     28
 (மாசிற்று = மாசு இற்று = அழுக்கின்றி) 
. 
சிற்றஞ் சிறுகாலே
சென்றவனைக் கும்பிட 
லுற்றநல்
லாய்ச்சியர் ஓதியதைக் – குற்றமிலாப் 
பாகெனவே கோதையுரை
பாவெள் ளமதற்கீ(டு) 
ஆகிடுமோ வங்கக்
கடல்.                       29
வங்கக்
கடல்கடைந்த மாதவனை நாடியே 
அங்கப் பறைகொண்ட
வாற்றினை – இங்குரைப்பார்க் 
கின்பம் பயக்கு
மெனவுரைத்த நற்கோதாய் 
மன்னுயிர்
காத்திடம் மா!                       30. 
No comments:
Post a Comment