நினைவில் நீயே 
நினைவில் நீயே நிதமும் நிற்கிறாய் 
நின்னைக் காணா நாளும் வாட்டமே 
கனவில் வந்து தொல்லை தருகிறாய் 
காதல் வடிவம் இதுவோ அறியேன் 
மனத்தில் நீங்கா நிலையாய் நிற்கிறாய் 
மதுவைப் போல மயக்கம் தருகிறாய் 
தினமும் என்னைச் சுற்றி வருகிறாய் 
திகைப்பில் நானும் மருண்டு நிற்கிறேன்
தனியே நின்று புலம்பி நிற்கிறேன் 
தவிப்பை மறைக்க வேடம் மாற்றினேன் 
கனிவாய் உன்னைப் பார்த்து ரசிக்கிறேன் 
காலம் எம்மை இணைத்து வைக்குமோ 
தினமும் தென்றல் தீண்டும் போதுநீ 
தீயாய் வந்து வாட்டி வதைக்கிறாய் 
இனிய அன்பில் நனையத் துடிக்கிறேன் 
எதிரே என்னைத் தேடி வருகுவாய்
No comments:
Post a Comment