'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 14, 2019

நினைவில் நீயே

நினைவில் நீயே

நினைவில் நீயே நிதமும் நிற்கிறாய்
நின்னைக் காணா நாளும் வாட்டமே
கனவில் வந்து தொல்லை தருகிறாய்
காதல் வடிவம் இதுவோ அறியேன்
மனத்தில் நீங்கா நிலையாய் நிற்கிறாய்
மதுவைப் போல மயக்கம் தருகிறாய்
தினமும் என்னைச் சுற்றி வருகிறாய்
திகைப்பில் நானும் மருண்டு நிற்கிறேன்

தனியே நின்று புலம்பி நிற்கிறேன்
தவிப்பை மறைக்க வேடம் மாற்றினேன்
கனிவாய் உன்னைப் பார்த்து ரசிக்கிறேன்
காலம் எம்மை இணைத்து வைக்குமோ
தினமும் தென்றல் தீண்டும் போதுநீ
தீயாய் வந்து வாட்டி வதைக்கிறாய்
இனிய அன்பில் நனையத் துடிக்கிறேன்
எதிரே என்னைத் தேடி வருகுவாய்

நிர்மலா சிவராசசிங்கம்

No comments:

Post a Comment