எந்தமிழ் 
    சியாமளா
ராஜசேகர்
முன்னவள்
சுவையில் இனியவள் கன்னல்
***மொழியவள் இளமை
யானவள் !
தன்னிக ரின்றித்
தனித்துவ மாகத் 
***தரணியை ஆளும்
தன்மையள் !
நன்னய மிக்க
இலக்கண வளமும் 
***நல்லிலக்
கியங்கள் கொண்டவள் !
தென்னவன் மன்றில்
வளர்ந்தவள் புவியில் 
***செம்மொழி யாகச்
சிறந்தவள் !!
இயலுடன் இசையும்
நாடக மென்றே 
***இயல்பினில்
மூன்றா யானவள் !
உயிரொடு மெய்யும்
உயிர்மெயு மாகி 
***ஓரெழுத் தாய்த
மானவள் !
துயருறும் போது
சுகம்பெற தமிழே 
***துடைத்திடும்
கையாய் நீள்பவள் !
தயவுடன்
விரும்பும் அன்னியர் தமக்கும் 
***தமிழமிழ் தம்போல்
சுவைப்பவள் !!
கல்லையும் கனியச்
செய்பவள் தம்மைக் 
***கற்பவ ருள்ளம்
நிறைபவள் !
வெல்லமாய் நாவில்
இனிப்பவள் என்றும் 
***வெற்றிகள்
ஈட்டித் தருபவள் !
நல்லறம் காட்டி
மிளிர்பவள் வாழ்வில் 
***நைந்திடா
வண்ணம் காப்பவள் !
வல்லவள் ழகரச்
சிறப்பவள் எங்கும் 
***மணப்பவள் வாழி
வாழியே !!
No comments:
Post a Comment