சாமி சரணம்
தர்மா
வரமருளும் ஐயப்பன் கோயி லுக்குள் 
~~மங்கையரை வரவேண்டா மென்று ரைத்தோம் 
அருள்வடிவாய் ஐயனுக்காய் மஞ்சள் மாதா! 
~~அங்கிருப்பார்! நாம்மட்டும் போக லாமோ? 
பருவமுள்ள பெண்களுக்குப் பாது காப்பைப் 
~~பலப்படுத்தும் நாள்வரையில் பொறுங்க ளென்று 
தரமாக எடுத்துரைக்க முயல வேண்டும்,. 
~~தடம்பதித்தால் தீட்டென்று சொல்லல் பாவம்!  
கணவனவன் இறந்துவிட்டால் மனைவி யைத்தான் 
~~கண்முன்னே தீயிலிட்டுப் பொசுக்கி னாரே! 
மனைவியவள் இறந்துவிட்டால் கணவன் ஓடி 
~~மரித்ததாகச் சான்றேதும் உண்டா சொல்வீர்! 
முன்னழகை மறைப்பதற்காய் ஆடை யிட்டால், 
~~முலைவரியைத் தாவென்று சொன்னோர் ஆண்கள்! 
தென்னாட்டின் மன்னவனின் சேயைப் பெண்கள் 
~~தேடிப்போய் வழிபட்டால் குற்றம் என்ன! ... 
வருமானப் பேராவ லுற்று வந்து 
~~வழிவழியாய் வந்திருந்த மரபை மாற்றி 
இருக்கையிலே குற்றங்கள் இல்லை யென்றோர், 
~~இருமுடியைக் கட்டிவந்த பெண்ணி னத்தை  
இருவேறு குழுக்களாகப் பிரிக்க லாமோ 
~~ஏனென்று கேட்போர்கள் வரலாற் றைத்தான் 
தெரியாமல் உலவினரென் றேநான் சொல்வேன்..! 
~~தெளிவுற்றால் ஒருமதத்தைக் காக்க லாமே..  
மாட்டுக்குப் பூசைசெய்ய வழிகள் உண்டு! 
~~மாந்தருக்குள் பிரிவினைகள் இன்னும் ஏனோ! 
தீட்டென்ற சொல்லேதும் இல்லை ஐயா 
~~தேவைக்குக் கருத்துரைத்தல் கேட்டை நல்கும்! 
ஓட்டுக்காய்ப் பிரிவினையை ஊக்கு வித்தால், 
~~ஒருநாளும் முன்னேற்றம் கிட்டா தென்றும், 
வாட்டத்தைப் போக்குதற்கு வழியைக் கண்டு 
~~வழிமொழிந்த சான்றோரைப் போற்றல் நன்றே.. 
ஆண்கடவுள் கட்காக ஆண்கள் கூடி, 
~~ஆலயத்தில் வழிபாட்டைச் செய்கின் றோமே! 
மாண்புள்ள பெண்கடவுள் கட்கா யந்த 
~~மதிப்புள்ள பெண்ணினத்தை விடாத தேனோ! 
தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்தோ மென்று, 
~~தெருவெங்கும் மார்தட்டிப் பயனே இல்லை !
ஆண்களுக்கோ ரொப்பாகப் பெண்ணி னத்தை, 
~~அறவழியிற் போற்றிவரின் எவர்க்கும் நன்றே...
No comments:
Post a Comment