'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2020

நலத்துடன் வாழ்க


கவிஞர் சரஸ்வதிராசேந்திரன்

எழுசீர் விருத்தம்

நல்லதை  எண்ணி  நலத்துடன் வாழ
    நன்மையே  நடந்திடு  மென்றும்
 அல்லதைத் தள்ளி அறிவுடன்  நிற்க
    அற்புத  மாகுமே வாழ்வு
கல்மனம் கொண்டால் கற்றவர் மதியார்
    கருணைம னத்தினா லென்றும்
வல்வினை நீக்கி வாழ்வினை யேற்றால்
    வணங்கிடும்  குவலய முனையே 

No comments:

Post a Comment