'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 14, 2019

பேருந்துப் பயணம்


கவிஞர்  சரண்ஜா செல்வரெத்னம்
முல்லைத்தீவு, இலங்கை.

தொலைதூரப்
பயணங்களை
எண்ணியே

கனவுகள்
நகர்ந்தாலும்… இன்று
நனவாய்

நீண்ட பயணம்
நிலையில்லா
ரசனைகள்

புல்வெளிகளும்
தரைகளும்
புல்லரிக்கும்
வாடைக் காற்றும்

உதயமாகும் சூரியன்
மரத்திடைவெளிகளில்
கதிர்கள் தெறிக்க

பேருந்து யன்னலில்
பட்டாம் பூச்சி
மோதி விளையாடி

மண்குடில்கள்
மாளிகைகள்
மனத்திற்குள்

கற்பனை
வாத்தியத்தின்
ஓசையில்

கடந்து
சென்றேன்
பயணங்களை.

No comments:

Post a Comment