'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 14, 2019

மழை


கவிஞர்
சரசுவதி ராசேந்திரன்

கடலதன் நீரைக் கதிரவன் கடத்தக்
    கருமுகில் கனமழை தருமே
உடமைகள் தமைக்காத்(து) உயிரினம் பேணி
    உய்யுமே உலகமும் மழையால்
இடரது களையும் இன்பமும் சேர்க்கும்
    இறையினால் பொழிந்திடும் மழையே
கடலினில் அலையும் கயல்களைப் போல
    களிப்பினால் துள்ளுநம் மனமே!

No comments:

Post a Comment