'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

தேடிப் பருகிடு தேன்

கவிஞர் நா.பாண்டியராசா

நேரிசை வெண்பா

 

கூடும் இனமது கூடிநின்று பேசிடப்

பாடிடும் நாவது பண்பாட்டே - நாடிட

ஆடிடும் உள்ளுணர்(வு) ஆகாயம் ஏறிடத்

தேடிப் பருகிடு தேன்.

 

மேடுபள்ளம்  வாழ்வில் மலையென நின்றேதான்

சாடும் சகுனியின் சூத்திரம் - ஆடுமே!

ஓடாது நின்றிருந்(து) ஓங்கார மிட்டேதான்

வாடாது நின்றுநீ வாழ்.

No comments:

Post a Comment