'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

வினாதலும் விடுத்தலும்

அடுக்குத் தொடரில் ஒற்று மிகாது என்று ஒரு விதி இருக்கிறது. இதன் விதிவிலக்குகளைக் கொஞ்சம் விவரமாகச் சொல்ல முடியுமா? 

- கவிஞர் சுபாஷினி ரமணன்

அடுக்குத்தொடராவது பெயர்ச்சொல்லோ வினை முற்றோ பிறவோ சில குறிப்புக்காய் அடுக்கி வருவதாம்.

அடுக்குத் தொடரில் வலி மிகாது எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லலாகாது.

 

·        பாம்பு பாம்பு

·        நின்றன நின்றன

·        தீ தீ

·        சீ சீ

இவை இயல்பு

 

·        கொத்துக் கொத்தாக

·        பூப்பூவாய்

·        திரும்பத் திரும்பச் சொன்னேன்

·        படித்துப் படித்துத் தெரிந்துகொண்டேன்

·        தேடித் தேடிக் களைத்தேன்

இவ்வாறு மிகும்

 

·        பலபல, பலப்பல, பல்பல, பற்பல

·        சிலசில சிலச்சில, சில்சில, சிற்சில

இவ்வாறும் வரும்.

 

இவற்றை விதி விலக்குகள் என்று சொல்லாமல் அவ்வவற்றின் இலக்கணக் குறிப்புகளைக் கண்டு அவ்வாறே கொள்க.


No comments:

Post a Comment