'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 14, 2020

காதலோடு கண்மயங்கும்

 கவிச்சுடர் இளவல் ஹரிஹரன், மதுரை

  

காதலோடு கண்மயங்கும் காமரசம் உள்முயங்கும்

ஆதரவாய்க் கவிதைகளோ பொங்கும் - மனம்

ஆசையலை ஆடிடவே தங்கும்.

 

பாதமுதல் கேசமீது பார்த்தலையும் கண்களுடன்

வாதம் செய்து வம்பிழுக்கும் நெஞ்சம் - அவள்

வடிவழகைக் கண்டுமிகக் கெஞ்சும்

 

மோதவரும் முன்னழகும் மோகமூட்டும் பின்னழகும்

காதலோடு கவிதைசொலத் தூண்டும் - அடடா

காத்திருக்கும் சொற்களெலாம் வேண்டும்

 

பாதரசம் போலமின்னும் பார்வைகளோ போதையூட்டும்

மாதவளோ தேன்வழியும் கிண்ணம் - எனை

மயக்குதடி நினைவிலெழும் எண்ணம்

No comments:

Post a Comment