கவிஞர் செந்தில் குமார்
ஆய்நல் அபய மளிக்கு மெனக்கே                1
கோடில் செலவு கொளுமிட முன்றன்    
கேடி லாத கோவில் ஒன்றே                            2
ஆநலம் காப்போய் பூநலம் காப்போய்
நாநலம் காவா நரனெனைக் காவே             3
பொன்னிழை இரியப் புன்னகை புனைந்தோய்
கண்கடை வழியும் கரிநீர் மாற்றே                               4
என்னிடை ஏதும் இல்லெதென் றறிந்தும்
மென்வளை இறுக்கி முறித்தல் ஏனோ         5
பொன்னொடு மணியும் பொருள்நிறை வேண்டேன்
கண்ணீ ரழிக்கக் கருதுளம் கொள்ளே         6
செம்பொன் கெடுநல் செந்நிற முடையோய்
அம்பொன் கபாடம் அழைமின் திறவே        7
வானகம் நோக்கி மாவிழி விரித்தோய்
ஆணகம் நிறைந்தே அருள்நிறை செய்யே  8
இருபே ருலகும் ஈரடி அளந்தோய்
திருஇல் என்றன் தீத்துயர் ஒழியே                 9
பட்டால் கலையைப் பாங்குடன் அணிந்தோய்
முட்டுங் கண்ணீர் முற்றவு மருளே!               10
No comments:
Post a Comment