பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்
உள்ளமதை இதமாக்கும் தூய அன்பே
    உணர்வினிலே என்றென்றும்
கலந்து நிற்கும்
கள்ளமற்ற பாசத்தால் நெருங்கி வந்து
    கலக்கமது தெளிவுறவே பேசி
நிற்கும்
தள்ளிநின்று வேடிக்கை பார்ப்ப தில்லை
    தள்ளாடும் வேளையினில் துணையாய்
நிற்கும்
எள்ளுதல்கள் மனத்தினிலே எழுவ தில்லை
    ஏற்றமுற வழிவகைகள் உவந்து
நல்கும்                 1
நல்வழியில் செல்வதற்கே உதவி செய்து
    நலமுறவே வாழ்வதற்குக் கரங்கள்
நல்கும்
ஒல்லாதார் நட்புதனை எடுத்துக் கூறி
    உறவுதனைத் தகர்த்தெறிய வழியும்
செய்யும்
தொல்லைதனை அகற்றிடவே துணிந்து நின்று
    துயரமதை வென்றிடவே மகிழ்ந்து
நிற்கும்
எல்லையில்லா இன்பமதில் திளைத்து நிற்க
    இதயமது மலர்ந்திருக்கும்
உண்மை அன்பு          2
அன்பினாலே பேசுவதில் மிளிரும் பண்பில்
    ஆணவமும் ஒருபோதும் எழுவ
தில்லை
இன்னலினைக் கொடுப்பதற்கு நினைப்ப தில்லை
    இன்முகமே என்றென்றும் காட்டி
நிற்கும்
தன்னலமே கருதாத உயர்ந்த பண்பைச்
    சாய்த்துவிட எவராலும் முடியா
தன்றோ
நன்றிதனை எதிர்பார்த்து நிற்ப தில்லை
    நயமுறவே பழகிடுமே என்றும்
வாழ்வில்               3
வாழ்வுதனைச் சிறப்பிக்கும் உண்மை அன்பு
    நலமுறவே வாழ்வதற்கும் துணையாய்
நிற்கும்
தாழ்வுற்ற வேளையிலும் அருகில் நிற்கும்
    தலைகுனியும் போதினிலும்
முன்னே நிற்கும்
ஆழ்கடலைப் போலவொரு தோற்றம் காணும்
    ஆனந்தம் பெருகியோட வழிகொ  டுக்கும்
வாழ்வாங்கு வாழ்வதற்கே உதவும் அன்பு
    வலிகளையும் நீக்கிநிற்கும்
தூய நெஞ்சம்            4
நெஞ்சமதை நெகிழவைக்கும் அன்பொன் றேதான்
    நினைவினிலும் நிழலாகத் தொடரும்
நம்மை
வெஞ்சினத்தைத் தணித்துவிடும் சக்தி உண்டு
    வேதனைகள் ஆற்றிவிட மருந்தாய்
நிற்கும்
வஞ்சமது மனத்தினிலே சற்று மில்லை
    வாழ்த்துகின்ற எண்ணங்கள்
நிலைத்து நிற்கும்
செஞ்சுடரைப் போன்றவொரு உண்மை அன்பு
    சிறப்புறவே கிடைத்திட்டால்
வாழ்வே ஓங்கும்    5
ஓங்குகின்ற புகழதனைக் காணும் நெஞ்சம்
    உவகையுற்று வாழ்த்துதனைச்
சொல்லி நிற்கும்
ஏங்குகின்ற காலமதில் அருகில் நின்றே
    ஏமாற்றம் தவிர்த்திடவே யுக்தி
சொல்லும்
பாங்காக எடுத்தியம்பும் முன்னோர் சொற்கள்
    பதறாமல் பொறுமைதனைப் பேணச்
சொல்லும்
ஊங்களிக்கும் வார்த்தைதனை என்றும் ஓதி
    ஊக்குவிக்கும் உள்ளன்பு
குறையா வண்ணம்     6
வண்ணமுறக் குறைநிறைகள் சுட்டிக் காட்ட
    வசந்தங்கள் வாழ்வினிலே என்றும்
வீசும்
உண்மையான அன்புதனைக் காட்டி நிற்கும்
    உலகத்தோர் முன்னிலையில்
போற்ற வைக்கும்
எண்டிசையும் புகழுமாறு மிளிர்ந்து நின்றால்
    எள்ளளவும் பொறாமைகளும் எழவும்
மாட்டா
நண்ணலரும் நெருங்காமல் காத்து நிற்கும்
    நயப்புடனே என்றென்றும் துணையாய்
நிற்கும் 7
துணையாகச் செயல்படுமே துயர்கள் தீர்க்கத்
    தொல்லைகளை நீக்குவதில் மகிழ்வு
கொள்ளும்
துணிவுதனைச் செவிகளிலே என்றும் ஓதிச்
    சோர்வுற்ற வேளைகளில் கரத்தை
நல்கும்
பணிவுதனைப் பாசமாகக் காட்டி நிற்கும்
    பதறாமல் அறிவுரைகள் என்றும்
சொல்லும்
முணையின்றி என்றென்றும் பழகும் அன்பு
    முயற்சிக்குத் தோள்கொடுத்து
வழியும் காட்டும் 8
வழிகளையும் காட்டிநிற்கும் தூய அன்பு
    வாழ்வினிலே வென்றிடவும்
இடர்கள் நீக்கும்
அழிவற்ற பாதையினில் அழைத்துச் செல்லும்
    அச்சமின்றிப் பயணிக்கத்
துணையாய் நிற்கும்
நிழலாகத் தொடர்ந்துவந்து துன்பம் நீக்கும்
    நெஞ்சமது மகிழ்வுறவே வாழ்த்தும்
சொல்லும்
இழுக்கின்றி வாழலாமே பாரில் என்றும்
    இன்பமான அன்பொன்று கிட்டி
விட்டால்              9
இன்பமான அன்பொன்று கிட்டி விட்டால்
    இனிதாக வாழ்ந்திடலாம் பாரில்
என்றும்
புன்கண்மை தூயன்பால் ஒழித்து விட்டால்
    பொய்மைகளும் அழிந்துவிடும்
உலக மெங்கும்
அன்புதனைப் பொழிவதற்குப் பஞ்சம் ஏனோ
    அகிலமதில் குறைவுற்று வருவ
தேனோ
வென்றிடலாம் வாழ்வுதனை அன்பால் மேவி
    மேதினியில் புகழுடனே வாழ
லாமே                    10
முணை – வெறுப்பு; புன்கண்மை – துன்பம்.
No comments:
Post a Comment