'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 14, 2020

பெருநோய்

பைந்தமிழ்ப் பாமணி சரஸ்வதிராசேந்திரன்

பஃறொடைவெண்பா

 

வீதியுலாப் போனதினால் வீழ்ந்தேனே தீநோயில்

ஓதியவர் எல்லாம் ஒதுக்கிவிட்டு நின்றேன்

செருக்காய்த் திரிந்தேன் சிறுமையாய்ப் போனேன்

பெருக்கியே ஆட்டும் பெருநோயில் வீழ்ந்து

தெளிவிலா உள்ளத்தால் தீநோயும் பற்றி

ஒளிந்து கிடப்பதோ ஓய்வு

 

ஓய்வு கொடுக்கத்தான் ஓடோடி வந்ததோ

மாய்ந்துதான் போகிறார் மக்களும் ஏங்கியே

என்றுதான் தீருமோ இத்துன்பம் பூமியில்

மன்றாடிப் பார்க்கும் மருத்துவரும் நோயிடம்;

போதுமே சென்றிடு பொல்லாத நோயேநீ

ஏதும் குறையில்லை இங்கு

No comments:

Post a Comment