'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

படைப்புச் செம்மல் விருது

 


கவிஞர் பொன். இனியன்

kuralsindhanai@gmail.com

8015704659


தமிழ்க்குதிர் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டன்று வழங்குகின்ற படைப்புச் செம்மல் விருது இந்த ஆண்டு அன்பு நிறை சான்றாளர், பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினர், திருக்குறள் ஆய்வாளர் பைந்தமிழ்ப் பாமணி பொன்.இனியன் ஐயாவுக்கு வழங்கப்படுகிறது. 

இந்தத் திங்கள் நடைபெறவுள்ள பைந்தமிழ்ச் சோலை இலக்கியப் பேரவை இலக்கியக் கூடலில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.


1. மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

குறள்வழி நிற்குங் குணத்தினர் செப்புஞ்

சிறப்புட னாய்வார் குறளைத் - திறந்தமனப்

பொன்னினியர் பாரில் புகழுடன் நின்றோங்க

வென்னிதய வாழ்த்தளித்தே னின்று.


2. கவிஞர் மிழகழ்வன்

குறளுரைபல குடைந்தாய்ந்துரை

மறவாளரை மறவாதிருந்து

இனிதாயொரு வாழ்த்துரைக்கிறேன்

இனிக்க

வாழ்க வாழ்க பல்லாண்டு

வையம் போற்ற வாழ்க வாழ்கவே!


3. கவிஞர் நெடுவை இரவீந்திரன்

அன்புநிறை வாளர் அருமைப் படைப்பாளர்

என்னினிய நண்பர் எழுத்தாளர் - பொன்னினியர்

பல்லாண்டு சீராண்டு பாவாண்டு கூராண்டு

கல்லாண்டு வெற்றிகளைக் காண்.

No comments:

Post a Comment