'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

வேளாண்மையே வெற்றி

 பைந்தமிழ்ச் சுடர் மெய்யன் நடராஜ்


கதைகளைப் பேசிக் கடத்திடுங் காலம்

    கழனியை உழுதிடக் காசு கொட்டும்

சதைநகம் போன்று சலம்நிலம் சேர்ந்த

    சகதியில் பயிரிட சங்கட மோடும் 

விதையினைப் போட்டு விளைச்சலைத் தேடு

    வெற்றியுன் வாசலை விரைவில் தட்டும்

பதைபதைப் பூட்டும் பசியினைத் தீர்க்கப்

    பண்படுத் தியவயல் பால்வார்த் திடுமே!


No comments:

Post a Comment