'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

நஞ்சானேனா நஞ்சேன் நான்

(ஒட்டியும் ஒட்டாமலும்)

கவிஞர் சு.அய்யப்பன்


தொட்டணைத்தும் முத்தமிட்டும் தோளணைக்கும் என்னத்தான்

ஒட்டியம்போல் ஒட்டும் உயிருறவா - விட்டகலும்

நெஞ்சேகேள் ஏன்நீங்கி நின்றார் இதழகலாய்

நஞ்சானே னநஞ்சேன் நான்


முதல் 2 அடி ஒட்டும் (கலவியைப் பாடும்), பின் 2 அடி ஒட்டாது (பிரிவில் ஒட்டாது).

‘நஞ்சானேனா? நஞ்சேன் (நைந்தேன்) நான்’ என்பது ஒரு பொருள்

‘அவருக்கு நஞ்சானேனா - அந்த நஞ்சு ஏன் - நஞ்சேன் (நைந்தேன்) இன்னும் உயிர் வாழவா’? என்பது மற்றொரு பொருள்

குறிப்பு: கவிஞர் கவிமேகம் கேட்டுக்கொண்டபடி, முன் 2 அடிகள் ஒட்டியும் பின் 2 அடிகள் ஒட்டாமலும் பாடிய வெண்பா.

No comments:

Post a Comment