'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

திருமாலைத் தேடி…

பைந்தமிழ்ப்பாமணி

சரஸ்வதி ராசேந்திரன்


வெண்டளையானியன்ற

எண்சீர் ஆசிரிய விருத்தம்


திருப்பாவை பாடித் திருக்கோவில் நாடித்

    தினமும் திருமாலைத் தேடியேநான் வந்தேன்

பெருமாளை நாடிடப் பேரருளும் செய்வான் 

    ‘பிறப்பின்றி என்னைப் பரந்தாமா காக்க’

உருகும் மனமும் உணரவருள் தந்தே

    உலகினில் தோன்றும் உயிரினங்கள் யாவும்

திருவும் பொருளும் திருத்தமாய்க் கொண்டு

    தினமும் துணையாய்த் திருவருளை வேண்டும்

 

No comments:

Post a Comment