'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

மருத்துவ வெண்பா - கொய்யாப் பழம்

 கவிஞர் வ.க.கன்னியப்பன்

கண் மருத்துவர் & தமிழ் ஆர்வலர், மதுரை


நேரிசை வெண்பா


திரிதோசஞ் சென்னித் திருப்ப மரோசி

பொருமாந்தம் வாந்தி பொருமல் – கரப்பானும்

மெய்யாய்ப் பரவுமல மெத்தவிடும் போகமுண்டாங்

கொய்யாப் பழத்தினாற் கூறு. 46

- பதார்த்த குண விளக்கம்


குணம்:

கொய்யாப் பழத்தினாற் முத்தோசம், தலை மயக்கம், அருசி, மந்தம், சர்த்தி, வயிற்றுப்புசம், கரப்பான், வீரியம் இவைகள் உண்டாகும். மலங் கழியும்.


உபயோகிக்கும் முறை:

நன்றாய்க் கனிந்த பழத்தையுண்ண மனத்திற்குக் களிப்பை உண்டாக்கும். 

இரைப்பைக்கு பலத்தைக் கொடுப்பதுடன் விக்கல் இருப்பின் நிறுத்தி விடும். 

எளிதில் சீரணப்படாமல் மந்தம், வயிற்றுப் புசம், அரோசகம் முதலியவற்றை உண்டாக்கும். 

இதன் விதை வயிற்றில் சிக்குமாயின் சீதபேதி, உஷ்ண பேதி உண்டாக்கும்.


இப்பழத்தில் சிவப்பு, வெள்ளை என இருவகையுண்டு. இவை நிறத்தில் வேறுபட் டிருப்பினும் குணத்தில் ஒன்றேயாகும்.


No comments:

Post a Comment