'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

மயானம்

 பைந்தமிழ்ச் சுடர் மெய்யன் நடராஜ்


வரவேற்க ஆளில்லா வாச லென்றும்

    வழிகாட்ட யாருமில்லா வனந்தா னென்றும்

தரமற்ற தானவிடந் தானஃ தென்றும்

    தனியாகச் செலவியலா தென்றும்  கூறி

வரமாட்டே னெனச்சொல்ல வியலா தந்த

    வனந்தேடிச் செலவேதான் வந்தோ மிங்கே

வரமாகக் கேளாமல் வாய்க்கு மிந்த

    வாசலிலே தானெவர்க்கும் வாழ்வின் முற்று


No comments:

Post a Comment