'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

கோர மதுவது கூடாதே!

 பைந்தமிழ்ச் செம்மல்

செல்லையா வாமதேவன்


தானன தனன தானன தான

  தானன தனன தானானா


பாவியு னுடலு மேமெழு காகு

  பாதக மதுவை நாடாதே

    பாரினி லறிவு மேநிறை வான

      பாரக னிதனை நாடானே

கூவிய படியு நீவரு வேளை

  கோலம யிலுளம் வாடாதோ

    கூளியர் அணுகு கூளனு மாகு

      கோரம துவது கூடாதே

தாவியு மனைவி நோயுரு வோடு

  சாயுமு னுடலை வீழாது

    தானழு தழுது போதையி லாடு

      தாவடி முனையில் நோவாளே

பூவிரி நறவ மாய்நிறை வீடு

  போதையில் நலிவ தாகாதே

    பூசனை புரியும் ஈசனை நாடு

       பூரண விடிவில் வாழ்வாயே!


(பாரகன் - நன்கு கற்றவன்; 

கூளியர் – கெட்டவர்; 

கூளன் – பயனற்றவன்; 

தாவடி - போர்)

No comments:

Post a Comment