'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

திருவே சரணடைந்தேன்

 பைந்தமிழ்ப் பாமணி மதுரா

திருவேசர ணடைந்தேனுனை திசையாயெனைக் காப்பாய்

இருளேயதை யழித்தேவொளிச் சுடராலெமைச் சேர்வாய்

உருவாகிய உருவாலொரு உலகேயிது மோங்க

அருளாலினி மழைபோலொரு அகமேகுளிர் விப்பாய்


குறையேயிலை எனையேயொரு மகவாயினி நினைந்தே

முறையாயொரு வரமேதரத் தடையேதினி சொல்வாய்

சிறைபோலொரு உலகேயிது துணையாயிரு தேவி

மறையோதிடு முனிபோலொரு நிலையாகிட அருள்வாய்


சுழலேயிது முழுகாதெனைக் கரைசேரவு மருள்வாய்

தொழுதேனுனை விலகாதிடத் துணிவேகொடு அம்மா

பழுதோயிவள் குறையோயெனப் பிழைநீக்கிடு தாயே

முழுதாயுனைப் பணிவேனெனை முறையாய்க்கரை சேர்ப்பாய்

No comments:

Post a Comment