'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

பாட்டும் இசையும்

பைந்தமிழ் பாமணி சரஸ்வதி ராசேந்திரன்

வளையற் சிந்து


அசைந்தாடும் மனத்தினையே

அமைதியாக்கும் பாட்டு - அதை 

அகங்குளிரக்  கேட்டு - பிறர்

அன்பதனைக் கூட்டு - மிக

அருமையான இசைகேட்டு

அல்லலைநீ ஓட்டு


இசையினிலே மனமயங்கும்

இன்பமெலா மொன்றே - தரும்

இறையுணர்வு நன்றே - மன 

இருளகலும் இன்றே - அதை

இயல்புடனே பயின்றவர்கள்

இலகுவென்பார் வென்றே

No comments:

Post a Comment