'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

வாழ்க்கை


சரஸ்வதிராசேந்திரன்

வஞ்சித்தாழிசை
தூக்கம் விடுத்தே
ஆக்கம் பெருக்கி
ஊக்கம் உயர்ந்தால்
பூக்கும் வாழ்க்கை

மனமும் திளைத்துத்
தினமும் உழைத்து
வனத்தை காத்தால்
தேனாய் வாழ்க்கை

அறிவை வளர்த்துச்
செறிவை புகுத்தித்
துறந்திடும் பொய்யால்
சிறந்திடும் வாழ்க்கை
வறுமை நீக்கிச்
சிறுமை விடுத்துக்
கருமை அழித்தால்
பெருமை வாழ்க்கை

சோதனை சகித்து
வேதனை விடுத்துப்
போதனை ஏற்றால்
சாதனை வாழ்க்கை

மனமும் விரிந்து
குணமும் நிறைந்து
பணமும் மிகுந்தால்
மணமாம் வாழ்க்கை

No comments:

Post a Comment