'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 13, 2020

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 17


           1.       கவிஞர் பொன்.  இனியன்

பணைத்தெழுந்து நில்லு; பகையெதையும் வெல்லு;
குணத்தைமிகப் பொல்லு; குறிதவறா தொல்லு;
அணைபோடு வெள்ளம் வருமுன்; அறிவின்
துணையோடு வாழ்க துணிந்து!

          2.       கவிஞர் செல்லையா வாமதேவன் 

வருந்தடை யெல்லாம் வரட்டும் வழுக்கள்
திருத்தித் தினமும் திறமை - பெருக்கி
இணையேது மில்லா தெமையாளும் ஈசன்
துணையோடு வாழ்க துணிந்து.

          3.       கவிஞர் வ.க.கன்னியப்பன்

உலகினில் வாழ்ந்திட ஒவ்வொருவர் உற்ற
நலமிக்க இல்லாளை, நாடுந் - திலகப்
பிணைப்பெனத் தேர்ந்து பெருமையுடன் பேணித்
துணையோடு வாழ்க துணிந்து

No comments:

Post a Comment