'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 13, 2020

குறுக்கெழுத்துப் போட்டி – 2


அன்பான கவிஞர்களே!

இதோ உங்களுக்காக ஓர் இலக்கணக் குறுக்கெழுத்துப் போட்டி. தங்கள் விடையை 31.07.2020க்குள் tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். சரியான விடை எழுதியவர்கள் பெயருடன் விடை அடுத்த இதழில் வெளியாகும்.


இடமிருந்து வலம்

1. நல்லனவாகிய நீதிகளின் தொகை. அதிவீரராம பாண்டியர் இயற்றியது. (5)
3. போரில் தலைவனை இழந்து, செயலற்று நிற்கும் நிலை (5)
4. இலக்கியப் பகுப்பின் பொதுப்பெயர். ஒழுக்கம் என்பதும் அதுவே. (2)
5. ஒருவகை இசைக்கருவி (2)
6. ‘ஆடுக செங்கீரை’ எனக் குறிக்கப்பெறும் பருவம் இந்தப் பறவையால் பெயர் பெற்றது (2)
7. மண் சுமந்தான் மகேசன். எதற்காக? (3)
8. இதன் சுவையோ விடேன் விடேன் என்றது. (2)
9. கலந்தருநன் (4)
11. தொடர்நிலைச் செய்யுளில் பெரும்பிரிவு.  (4)
12. ........யார் மனை அகல் (3)
13.பாலறி சொல். அளபெடுத்தது. (3)
14. குறைந்த அடிகளைக் கொண்ட அகப்பாடல்களின் தொகுப்பு (5)

மேலிருந்து கீழ்

1. நெடுநல்வாடை தந்தவன் (5)
2. ஒல்காப் பெரும்புகழுடைய நூல். (7)
3. ஒருதலைக் காதல் (4)
4. ஒரு மரம். ஓர் ஊர். ஓர் இடைச்சொல் (3)
5. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் (5)
8. வலிமை. வேறு சொல் (3)
9. மேற்கு. வேறு சொல் (4)
10. பல்லக்கு. வேறு சொல் (3)
11.சோலைகள் பல விரித்து வளம் பரப்புவது (3)
13. எண்ணாகும் வழி (2)

No comments:

Post a Comment