'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

இலக்கியக்கூடல் 12

பைந்தமிழ்ச் சோலை இலக்கியப் பேரவை – திருவண்ணாமலைக்கிளையின் 12ஆம் இலக்கியக் கூடல் 09-08-2020 ஞாயிறு அன்று ZOOM செயலி வழியாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்திரு மாரிமுத்து அவர்கள் ZOOM செயலியைத் இயக்கிக் கூடல் நிகழ்வுகளைப் பதிவு செய்தார். 

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்விற்கு முனைவர் த.உமாராணி அவர்கள் வரவேற்புரை யாற்றினார். மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் அவர்கள் தலைமையுரையாற்றினார். முனைவர் அர.விவேகானந்தன் அவர்கள் நோக்கவுரை நல்கினார். பைந்தமிழ்த் தொண்டர் அருள்வேந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. கவிஞர்கள் பாமாலை சூட்டி நினைவில் ஆழ்ந்தனர். அருள்வேந்தன் ஐயாவின் படைப்புகளை ஆவணப்படுத்தும் பணியைப் பைந்தமிழ்ச் சோலை மேற்கொள்ளும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக, வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள் பற்றித் தமிழகழ்வன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாகத்,  திருமதி. சுதா அவர்கள் நன்றியுரை நவில நாட்டுப் பண்ணுடன் இலக்கிய நிகழ்வு இனிதே நிறைவேறியது.

No comments:

Post a Comment