பைந்தமிழ்ப் பாமணி மதுரா
வண்ணப்பா
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன தனதானா
சிற்றலை தனிலொரு சிக்கிய இலையது
சுற்றிடு மிதயமு மெழிலாக
சித்திரை வருகையி லித்தரை மலருது
கொத்தென நிறையுது வளமாக
முற்றிய நிலவொளி உட்புக மனையிடை
முற்றமு நிறைவது நிலவாலே
மொட்டுக ளசையுது சிட்டதை யுரசிட
இப்புவி மகிழுது களிப்பாலே
சுற்றிடு புவியது சுற்றிலு மெழிலுட
னித்தமு முழலுது கனிவாக
சுத்தமு மவசிய மிக்கண மெனநினை
விட்டிடு நெகிழியை மனிதாநீ
கற்றவ ரனைவரு மொற்றுமை யுடனொரு
மித்தநி லையிலினி யிணைவோமே
கட்டிட வனமது பச்சையம் பருகிட
நித்தமு மரமது நடுவோமே!
No comments:
Post a Comment