'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

இயற்கையைக் காப்போம்

பைந்தமிழ்ப் பாமணி மதுரா

 வண்ணப்பா


 தத்தன தனதன தத்தன தனதன

        தத்தன தனதன          தனதானா


சிற்றலை தனிலொரு சிக்கிய இலையது

        சுற்றிடு மிதயமு                        மெழிலாக

    சித்திரை வருகையி லித்தரை மலருது

        கொத்தென நிறையுது             வளமாக


முற்றிய நிலவொளி உட்புக மனையிடை

        முற்றமு நிறைவது                    நிலவாலே

    மொட்டுக ளசையுது சிட்டதை யுரசிட

        இப்புவி மகிழுது                        களிப்பாலே


சுற்றிடு புவியது சுற்றிலு மெழிலுட

        னித்தமு முழலுது                      கனிவாக

    சுத்தமு மவசிய மிக்கண மெனநினை

        விட்டிடு நெகிழியை                 மனிதாநீ


கற்றவ ரனைவரு மொற்றுமை யுடனொரு

        மித்தநி லையிலினி                  யிணைவோமே

    கட்டிட வனமது பச்சையம் பருகிட

        நித்தமு மரமது                          நடுவோமே!

No comments:

Post a Comment