அன்புக்குரியீர், வணக்கம்.
தண்டமிழின் பணியொன்றே தலையாய பணியாகச் செய்துவரும் பைந்தமிழ்ச்சோலை முகநூற் குழுமத்தின் வேந்தர் விருதுகளுக்கான தேர்வுகள் 26/07/2020 அன்று நடைபெற்றன.
ஒரேயொரு கவிதையை மட்டும் (தப்பும் தவறுமாக) எழுதினாலே சக்கரவர்த்தி, இமயம், அருவி என்றெல்லாம் விருதுகளை வாரி வழங்கும் அமைப்புகளிடையே, தேர்வு வைத்துப் பல்வேறு நுட்பங்களுடன் தேர்வுக்குரிய வினாவிடைகளை எழுதி, நடுவுநிலையுடன் திருத்தம் செய்யபெற்ற தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்பெறும் விருது இது. எனவே, தகுதியான நபருக்குத் தகுதியான முறையில் தகுதியான நபரால் வழங்கப் பெற்றது என்பது பெற்றாம்.
தேர்வில் 90 மற்றும்
அதற்குமேல் மதிப்பெண் களைப் பெற்று 2020ஆம் ஆண்டிற்கான
வெண்பா வேந்தர் விருது பெறுவோர்:
1. வாமதேவன் செல்லையா
2. ஃபக்ருதின் இப்னு
3. சங்கத்தமிழ்வேள் சத்யா
4. இரா.அழகர்சாமி.
காரிகை வேந்தர் விருது பெறுவோர்:
1. சிதம்பரம் சு.மோகன்
2. மதுரா
விருத்த வேந்தர் விருது பெறுவோர்:
1. இதயம் விஜய்
2. வாமதேவன் செல்லையா
3. பசுங்கிளி மணியன்
அகவலரசர் விருது பெறுவோர்:
1. இதயம் விஜய்
2. வாமதேவன் செல்லையா
3. நெடுவை இரவீந்திரன்
4. சோமு.சக்தி
(கொரோனா நுண்தொற்றால்
சோலை விழா நடைபெறுவது குறித்த முடிவுகள் எட்டப்பட வில்லையாதலால், விருதுகள்
வழங்கப்படும் முறை பின்னர் அறிவிக்கப்படும்).
வெற்றி வாய்ப்பைத்
தவறவிட்ட மற்ற நண்பர்களின் முயற்சிக்கும், துணிவுக்கும் என்னுடைய மனமார்ந்த
பாராட்டைத் தெரிவித்து மகிழ்கிறேன். அடுத்த ஆண்டில் அவர்கள் வெற்றி பெறுவர் என்று
நம்புகிறேன்.
வெற்றிபெற்ற அனைவருக்கும்
என்னுடைய சார்பிலும், பைந்தமிழ்ச்சோலையின் சார்பிலும் வாழ்த்து மலர்களைத்
தூவுகிறேன்.
என்றும் தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
No comments:
Post a Comment