கவிஞர் செந்தில் குமார்
கிளிக்கண்ணிகள்
ஏகன் வருவானடி - கிளியே
எங்கும் அவன்தானடி 1
காவடியுந் தோளாடக் கந்தன் நினைவோடச்
சாவடிக்கு வந்தோமடி - கிளியே
தஞ்சம் தருவானடி 2
மூங்கில் இசைபாட முப்பொழுதும் நான்வாட
ஏங்கும் நிலைதானடி - கிளியே
இறுமாப்புக் கொண்டானடி 3
எள்ளி நகையாடி என்னில் விளையாடி
அள்ளிக் கொள்வானடி - கிளியே
அழகன் அவன்தானடி 4
தங்கரத மேறித் தவழ்ந்துவரும் பிள்ளையவன்
அங்கம் நிறைந்தானடி - கிளியே
அவனின்றி நானேதடி 5
ஆறுபடை வீடுடையான் ஆதியந்தம் இல்லாதான்
பேறெல்லாம் தந்தானடி - கிளியே
பெரும்பேறு கொண்டானடி 6
பழனிமலை மீதமர்ந்து பக்தர்களைக் காப்பவன்தான்
பழம்வேண்டி அமர்ந்தானடி - கிளியே
பண்டார தெய்வமடி 7
செழுங்குரங்கு ஓடியாடும் சென்னிமலை மீதினிலே
தேரோட்டம் காண்பானடி - கிளியே
செந்தமிழில் சொல்வேனடி 8
அஞ்சுசடை கொஞ்சும் அழகுசடை மார்புரளும்
பிஞ்சுக் குளவியடி - கிளியே
பித்தாகிப் போனேனடி 9
தென்பழனி ஊரினிலே தேரோடும் வீதியெல்லாம்
அண்ணலவன் ஆள்வானடி - கிளியே
அகிலமெல்லாம் போற்றுமடி 10
No comments:
Post a Comment