கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன்
பதின்சீர் விருத்தம்
நின்றேன் சோலை தன்னில் நானும் தனியாக
நிழலாய் வந்தாள் என்றன் துணையாய் அருகினிலே
பன்னீர் சொரியும் பூக்கள் அவளை வாழ்த்திடுதே
பக்கம் வந்த ஈக்கள் அவளை மொய்த்திடுதே!
அன்பைப் பொழியும் நிலவும் மெல்ல வெளிவருதே
அவளைக் கண்டு நாணி மீண்டும் மறைகிறதே!
மின்னல் போல என்றன் வாழ்வில் வந்தவளே
மீண்டும் புன்ன கைசெய்(து) என்னை உயிர்த்திடுவாய்!
No comments:
Post a Comment