'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 16, 2020

அம்மானை

கவிஞர் செந்தில் குமார்

 

வைக்காவூர் வாழ்வீரன் மால்மருகன் வாக்கிங்குப்

பொய்க்கா துடையோர்க்கும் பொய்க்காதே அம்மானை

பொய்க்கா துடையோர்க்கும் பொய்க்காதே ஆமாயின்

உய்க்காதி ருப்போரும் உண்டேயேன் அம்மானை

        உள்ளம் அவனிடத்(து) ஒன்றாமை அம்மானை

 

பேரண்டம் தானாகிப் பேருருவம் என்றாகி

ஓரிறைவன் கந்தனென்றே ஓர்ந்தேன்யான் அம்மானை

ஓரிறைவன் கந்தனென்றே ஓர்ந்ததுவும் உண்மையெனப்

பாரில் பலகடவுள் பாடலுமேன் அம்மானை

        பாழ்மனத்தில் இல்லாத பக்குவமே அம்மானை

 

(வைக்காவூர்-பழனியின் பழம் பெயர்)

No comments:

Post a Comment