'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 16, 2020

முடியரசென முதன்மை யடைவமே

 கவிஞர் செந்தில் குமார்

தரவு கொச்சகக் கலிப்பா

 

மலையென வளங்குவித்த மறத்தமிழர் நிலைமாறிச்

சிலையென நிற்பதுவோ சிறப்பிழந்து திரிவதுவோ

முலைப்பாலின் உரமனைத்தும் முறைகெட்டுப் போனதுவோ

விலையில்லாப் பொருளினுக்கே விலைபோகத் துணிவதுவோ

மக்களெல்லாம்

படிய ரிசியைப் பணிந்தேற் கின்ற

அடிமை நிலைய ழிந்து

முடிய ரசென முதன்மை யடைவமே

No comments:

Post a Comment