'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 16, 2020

பரமன் திருப்புகழ்

 பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்


தனாதன தனாதன தனாதன தனாதன

தனாதன தனாதனத்    தனதானா ( அரையடிக்கு )

 

சடாமுடி யிலேபிறை நிலாவுந திசூடிய

    தயாபர னினாசியிற்    கவிபாடும்

சதாசிவ னினாமம துநாவிலு ரைவோரது

    சகாவென வராதிருப்    பவனோநீ

விடாதுவ ருதீவினை களோடவி டுமீசனை

   விடாதென துபாடலிற்    பதிவேனே

விதேகம துதாவென உமாபதி யைநாடிட

    விபூதியொ டுபேரருட்     புரிவானே !

சுடாதப னிமாமலை யிலாடுசி வனாரது

      சொரூபமி கவேஎழிற்     சிலைபோலும்

சுகானுப வனாயரு ளுமாகயி லையானது

     சுவாலையொ டுதானொளிப்     பிழம்பாக

அடாதன வெலாமறை யஞானவொ ளியாலுளம்

     அளாவிம கிழ்வோடுசற்    குருவோடே

அநாதிய வன்நீழலி லுலாவுவ ரமேதரும்

    அராவணி யுமீசனைப்    பணிவேனே !!

 

விதேகம் - தேக விமோச்சனம்

அடாதன - தகாதன

No comments:

Post a Comment