'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

எழுதுகோல் புரட்சி - கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன்


அறுசீர் விருத்தம்

எழுதுகோல் மையால் எழுந்தது புரட்சி
   எங்களின் சுதந்திரமே
முழுமையாம்  எழுத்தால் மூழ்கியே போச்சு
   மூடநம் பிக்கைகளும் 
வழுவிலா வாழ்நாள் வல்லமை கிடைக்க
   வந்தது  நெம்புகோலாய்
பழுதிலா மூத்தோர் பண்பினைச்  சொல்லிப்
   பதித்தது பாரினிலே

சத்திய வழியில் சதமெனச் சார்ந்து
   சரித்திரம் ஆக்கியதே
நித்தமும் தருவார் நிம்மதிப் பாக்கள்
   நிலைத்திடும் நீளுலகும்
புத்துயிர் அளிக்கும் புதுமை செய்யும்
   புரவலா் எழுதுகோலே
எத்தரை வீழ்த்தி  எரித்திடும் வலிமை
   எழுச்சியும் தருமெழுத்தே!

No comments:

Post a Comment